நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திடுங்கோ!
பொருள்:
மனித வாழ்க்கையில் விடியும் ஒவ்வொரு நாளும் இறைவன் ஏற்றுக்கொள்ளத்தக்கதான பொதுச் சேவைகளை முடிந்தமட்டும் செய்துகொண்டே இருங்கள்.
ஏவல் கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வேன்!
பொருள்:
உங்களுடைய சேவையை இறைவன் தனக்குச் செய்த சேவையாக ஏற்று அந்தந்த சேவைகளுக்கு ஏற்ப நமக்கு நற்கதியை அருள்வேன்.
சுமந்த பொற்பதத்தின் சுகம் பெற்று நீ வாழ்வாய்!
பொருள்:
நீ உன் மனதில் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாயோ அதற்கேற்பவே உனக்கு பலன் அருளப்படுகிறது.
விளக்கின் ஒளி போல் வீரத்தனமாய் இருங்கோ!
பொருள்:
விளக்கு ஏழை, பணக்காரன், வலியோர், எளியோர், படித்தோர், படியாதோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பேதம் பார்க்காமல் தனக்கே உரிய வெளிச்சத்தை கொடுப்பதைப் போல், நீங்களும் பாகுபாடற்ற நிலையில் பயப்படாமல் உங்களால் முடிந்த நற்செயல்களை செய்து கொண்டே இருங்கள்.
தாழக்கிடப்பாறை தற்காப்பதே தர்மம்!
பொருள்:
வாழ்க்கையை வாழ முடியாமல் வதங்குகின்ற ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு உதவியைச் செய்து அவர்களின் வாழ்நாளுக்கு வழி செய்வது, தர்மத்தில் எல்லாம் தலையாய தர்மமாகும்
Monday, December 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
I Expect more from u..
Thanks for Your
"அகிலத்திரட்டு தரும் அறிவுரை".
Really GOOD..
Nainaputhoor. Vel. Maheshkumar
Post a Comment